search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் ஆய்வாளர்கள்"

    வேலூர் மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பிரகாசம், வாணியம்பாடி நகர வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ராஜ்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், சிப்காட்-பனப்பாக்கம் திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த தியாகராஜன், வாணியம்பாடி அம்பலூருக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் கவுரிசங்கர், ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அரிதாஸ், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இந்துமதி, கலவைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் காந்தி, ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராகவும், குடியாத்தம் (கிழக்கு) வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த சிவசங்கரன், கணியம்பாடி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ரேவதி, வேலூர் கலெக்டர் அலுவலக ‘ஜி’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த இந்துமதி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் உள்பட மாவட்டம் முழுவதும் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ராமன் பிறப்பித்துள்ளார்.
    ×